இவன்
அ. நம்பி
தமிழ் (இந்திய) மலேசியன்
பணி ஓய்வு – கல்வித்துறை
A. Nambi
Tamil (Indian) Malaysian
pnrtrmr@gmail.com
22 மறுமொழிகள்
leave one →
அ. நம்பி
தமிழ் (இந்திய) மலேசியன்
பணி ஓய்வு – கல்வித்துறை
A. Nambi
Tamil (Indian) Malaysian
pnrtrmr@gmail.com
அன்புள்ள நம்பி!
உங்களைப் பற்றி,உங்களின் தமிழார்வம் பற்றி
சில வார்த்தைகள்..?
அன்புடன்,
தங்கமணி.
முன்னாள் அரசு பணியாளன் இவன்; கல்வித்துறையில் பணிசெய்தவன். இவனைப்பற்றி வேறென்ன சொல்ல!
Best and best wishes…
http://www.ithayanila.com
வருகைக்கு நன்றியறிதல் உடையேன்.
Excellent articles……
keep it up.
God bless you
Kv.Rahman
Journalist,
Chennai, India
Thanks for visiting and leaving a comment.
உங்கள் வலைப்பதிவுகள் அருமை..
கொஞ்சம் எனது வலைப்பதிவையும் நோட்டமிட்டு வாழ்த்துரை வழங்குவீர்களா? ஏனெனில் நான் அண்மையில் வலைப்பதிவு ஒன்றை துவங்கி உள்ளேன்.
http://www.vedantavaibhavam.blogspot.com
அன்பருக்கு,
திண்ணமாக வருவேன் ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
அய்யா உங்கள் முகத்தை ஒரு தடவை ……………….
ஆவலாக இருக்கிறோம் ……………….
அன்பருக்கு,
அழகழகான முகங்களைப் பார்த்து மகிழுங்கள் ஐயா. அறுபது ஆண்டுகளைத் தாண்டிய ஒருவனின் முகத்தைப் பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள்?
aiya, thanggal ‘Sakthi’ Aru.Nagappan avargal thaneh.
அன்பருக்கு,
//aiya, thanggal ‘Sakthi’ Aru.Nagappan avargal thaneh.//
தேடினால் நீங்கள் அவரை இங்கு `மறுமொழி’களில் காணலாம் ஐயா.
எடுத்துக்காட்டுக்கு: இங்கு – இங்கு
வரவுக்கு நன்றியறிதல் உடையேன்.
நாம் யார் என்பதைவிட நம் என்ன என்பதே பெரிது உமது செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள்.
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
உங்கள் சேவை தொடர இந்த இந்த சிறுவனின் வாழ்த்துகள் அய்யா.
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
உங்கள் அன்புக்கும் வரவுக்கும் நன்றியறிதல் உடையேன்.
தொடர்ந்து வருகை தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அய்யா,
தமிழ் வணக்கம். தங்களின் எழுத்துக்கள் எல்லாம் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ ரகம்! பல பதிவுகள் சம்பந்தப்பட்டவர்களை ‘பளார்’ என்று பொறியில் அறைந்து திருந்து என்பதைப் போல் உள்ளது. உங்களைப் போன்றோர், இவ்வலையுலகுக்கு பெரும் எண்ணிக்கையில் அவசியம்!
வாழ்த்துக்கள் அய்யா, சமுதாயத்தை இடித்துத் திருத்தும் உங்களின் இச்சேவை தமிழ் சமுதாயத்துக்கு எப்போதும் தேவை! பதிவுப் பயணம் செவ்வனே தொடரட்டும்….
ஒரு சிறு விண்ணப்பமும் உள்ளது…..
நான் ஒரு முனைவர் பட்டப்படிப்பு அறிவியல் மாணவன், நான் படிக்கும் அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல எளிமையான நடையில் ஒரு வலைப்பதிவை சில காலமாய் எழுதி வருகிறேன். அதைப்பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை அறிய மிக ஆவலாக உள்ளேன். நேரம் இருப்பின் வருகை தாருங்கள்! நன்றி
http://padmahari.wordpress.com
பத்மஹரி.
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//நான் ஒரு முனைவர் பட்டப்படிப்பு அறிவியல் மாணவன்,…//
மிக்க மகிழ்ச்சி ஐயா; விரைவில் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துப் பட்டம் பெற உள்ளார்ந்த வாழ்த்துகள்.
//…நான் படிக்கும் அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல எளிமையான நடையில் ஒரு வலைப்பதிவை சில காலமாய் எழுதி வருகிறேன்.//
அறிவியலை விளக்கிச் சொல்வோர் எண்ணிக்கை இணையத்தில் பெருகுதல் வேண்டும்; உங்கள் முயற்சி நல்ல முயற்சி; வெற்றி பெறவேண்டும்; திண்ணமாக வெற்றி பெறும்.
//அதைப்பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை அறிய மிக ஆவலாக உள்ளேன். நேரம் இருப்பின் வருகை தாருங்கள்!//
`விரல் நுனியில் அறிவியல் சுவாசம், வலைமுழுவதும் விஞ்ஞான வாசம்’ … காணவும் படிக்கவும் சுவைக்கவும் அறியவும் இனி அடிக்கடி வருவேன் ஐயா.
THANGALIN MUHAM KAATTA MARUKKIREERKAL ! AAYINUM ENATHU KANIPPIL THANKALATHU POORVEEKAM TIRUNELVELI PAKKAM ENDRU ENNUKIREN , SARITHANE ??
அன்பருக்கு,
//THANGALIN MUHAM KAATTA MARUKKIREERKAL !//
`கிழவனின் படம் எதற்கு?’ என்று நினைத்துத்தான் இதுவரை என் படத்தை வெளியிடவில்லை. பார்ப்போம்… ஒருவேளை… வெளியிட்டாலும் வெளியிடுவேன்!
//AAYINUM ENATHU KANIPPIL THANKALATHU POORVEEKAM TIRUNELVELI PAKKAM ENDRU ENNUKIREN , SARITHANE ??//
`திரு’ சரிதான் ஐயா; ஆனால் `திரு’வை அடுத்து`நெல்வேலி’ அன்று; `சிராப்பள்ளி’; ஆமாம், திருச்சிராப்பள்ளி.
வணக்கம் ஐயா,
அந்த மலரினை தணிக்கை செய்யவே ஒரு தகுதி வேண்டுமென எண்ணினேன். நிறைய சொல்லி இருக்கிறார்கள் மேலுள்ளோர் உங்களை பற்றி. இனி மேலும் நான் வந்து இனிப்பை இனிப்பென்பதில் பயனில்லை ஐயா. தொடர்ந்து செயல் படுங்கள். நீடு வாழுங்கள். நலமோடிருங்கள். உங்களை போன்றோரின் பதிவுகள் வருங்காலத்தின் உபயோகமாகவும் சொத்தாகவும் போற்றப் படவேண்டியவை என எண்ண வைக்கிறது.
நம் தளத்திற்கு வருவோர் சிலர் வியந்தேன் என்பார்கள், அதெப்படி வியப்பது என்று எண்ணுவேன், இன்று வியந்தேன். வாழ்த்த வயதை தாண்டிய மனது போதுமெனில் மனதார வாழ்த்துகிறேன் ஐயா, வாழிய வாழிய பல்லாண்டு.
பெருத்த நன்றிகளின் கைகூப்போடு…
வித்யாசாகர்
குவைத்
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//வாழ்த்த வயதை தாண்டிய மனது போதுமெனில்…//
உண்மைதான் ஐயா; உண்மையான அன்போடு ஒருவரை வாழ்த்த நல்ல உள்ளம் போதும்; அகவைக்கு முதன்மை தரத் தேவையில்லை.
உங்கள் நல்லெண்ணமும் வாழ்த்தும் மகிழ்ச்சி தருகின்றன; தொடர்ந்து எழுத அவை துணைபுரியும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.