திருமணம் ஆன ஆண்களுக்கு மட்டும்…!
வீட்டுக்கு வருகிறீர்கள்.
நல்ல பசி; வயிற்றைக் கிள்ளுகிறது.
சாப்பிட உட்காருகிறீர்கள்.
மேசையில் உணவு ஏதுமில்லை.
நீங்கள் என்ன செய்வீர்கள்?
அ. மனைவிக்கு உதவி செய்யச் சமையலறைக்குச் செல்வீர்கள்.
ஆ. தொலைக்காட்சி பார்த்தபடி பொறுமையோடு காத்திருப்பீர்கள்.
இ. `விருட்’டென்று எழுந்து ஏதேனும் உணவகத்துக்குச் செல்வீர்கள்.
ஈ. எகிறிக் குதித்து எட்டு ஊருக்குக் கேட்குமாறு காட்டுக்கூச்சல் போடுவீர்கள்.
உங்கள் விடை என்ன?
உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும்.
`ஆ’ என்றால்… அண்மையில்தான் உங்களுக்குத் திருமணம் ஆகி இருக்கவேண்டும்.
`இ’, `ஈ’ – இவை இரண்டுக்கும் விளக்கம் தேவை இல்லை. `தமிழ்கூறு நல்லுலகில்’ ஏறத்தாழ ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் என்று சொன்னால் தவறாகாது.
மேலே உள்ள நான்கு விடைகளுக்கு அப்பால் ஐந்தாவது விடை ஒன்று இருக்கிறது. `ஐந்தாவது விடை’ என்பதைவிட (உங்கள் விடை `அ’, `ஆ’ இல்லையென்றால்) இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் கைக்கொள்ள `மிகச் சிறந்த வழி’ என்பது பொருந்தும்.
அந்த `மிகச் சிறந்த வழி’: இங்கு
- அ. நம்பி
கொளுத்திட்டாப் போச்சு….
:-)
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//கொளுத்திட்டாப் போச்சு…. :-)//
மிக மிக `ஆபத்தான’ ஆள்போலத் தெரிகிறதே ஐயா!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
அய்ய்ஹா … எனக்கு பொண்டாட்டியே இல்லையே…
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//அய்ய்ஹா … எனக்கு பொண்டாட்டியே இல்லையே…//
இருந்தால்…? மேலே அன்பர் `அகல்விளக்கு’ சொன்னாற்போல் `கொளுத்திட்டாப் போச்சு….’ என்பீர்களா?
கொளுத்துவது இருக்கட்டும்; நீங்கள் வழக்குரைஞர்! இப்படி ஓர் `ஆபத்தான’ ஆலோசனையைச் சொன்னதற்காக என்னை ஏதும் வழக்கில் சிக்கவைத்து நீதிமன்றத்துக்கு இழுத்துவிடாதீர்கள் ஐயா. என்னால் அவ்வாறெல்லாம் அலைய முடியாது; நான் அகவை கூடியவன்; என்பால் இரக்கம் காட்டி என்னை விட்டுவிடுங்கள்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
என்னா கொலைவெறி!
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//என்னா கொலைவெறி!//
கொலைவெறியா? எனக்கா? ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் உத்தமனுக்கு (நான்தான்….!) ஏன் ஐயா இந்த அவப்பெயர்?
உள்ளூரில் (மலேசியா) வெளிவரும் ஓர் ஆங்கில நாளிதழில் இந்தச் செய்தியைப் படித்தேன்.
`குடும்பப் பிரச்சினை’யைத் தீர்க்க வழி தெரியாமல் `நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’ ஆக அவதிப்படும் கணவர்களுக்கு `ஒரு நல்ல வழி காட்டுவோம்’ என்று நினைத்தேன்; செய்தியை இங்கு வெளியிட்டேன்.
ஒருமுறை தீ வைத்துவிட்டால் மீண்டும் பிரச்சினை வருமா என்ன? எவ்வளவு சிறந்த வழி!
`என் பரந்த உள்ளத்தையும் சமுதாய உணர்வையும் எல்லாருக்கும் உதவ நினைக்கும் மேலான எண்ணத்தையும்’ பாராட்டக்கூடாதா ஐயா?
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
PASI VANTHIDA PATHHTUM MARRANTHUPOM YENPTHU” THEE ” VAITHALAI SERTHTHU PATHINONTRAHA MAARRI VITTATHE !!
அன்பருக்கு,
காலம் மாறுகிறது ஐயா.
//உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும். //
:)
எப்புடி இப்புடி எல்லாம் ?
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//:) எப்புடி இப்புடி எல்லாம் ?//
உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன்… எனக்கு ஓர் ஐயம் தோன்றுகிறது. ஒருவேளை ஏதேனும் `கோளாறு’ இருக்குமோ? `கோளாறு’ என்னிடம்தானோ? ஒன்றும் விளங்கவில்லை ஐயா! (`கோளாறு’ முற்றிப்போகாமல் இருந்தால் சரி!)
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
//உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன்… எனக்கு ஓர் ஐயம் தோன்றுகிறது. ஒருவேளை ஏதேனும் `கோளாறு’ இருக்குமோ? `கோளாறு’ என்னிடம்தானோ? ஒன்றும் விளங்கவில்லை ஐயா! (`கோளாறு’ முற்றிப்போகாமல் இருந்தால் சரி!)
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.//
ஆக அழகான மனைவி என்பவள் சேலைக்கடை பொம்மை எதுவும் செய்யாவிட்டாலும் கடைக்காரர் நாள் தோறும் சேலை மாற்றி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார் இல்லையா ?
அன்பருக்கு,
//ஆக அழகான மனைவி என்பவள் சேலைக்கடை பொம்மை எதுவும் செய்யாவிட்டாலும் கடைக்காரர் நாள் தோறும் சேலை மாற்றி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார் இல்லையா ?//
அப்படியா, அப்படி இல்லையா? நீங்கள் சொன்னால் சரிதான் ஐயா.
என்ன கொடுமை சார் இது
அம்மா,
//என்ன கொடுமை சார் இது//
எதைக் கொடுமை என்கிறீர்கள்? வீட்டை எரித்தாரே அந்தக் கிழவர், அதைச் சொல்கிறீர்களா? இல்லை, அந்தச் செய்தியை இங்கு எடுத்து எழுதி இருக்கிறானே இந்தக் கிழவன் (அ. நம்பி), இதைச் சொல்கிறார்களா?
எது கொடுமையோ, என்ன கொடுமையோ, சிரியுங்கள்; சிரித்துவிட்டு விட்டுவிடுங்கள் அம்மா! சிரிப்பதற்காக எழுதப்பட்டதுதான் இந்த வரைவு!
(உங்கள் பெயரைக்கொண்டு நீங்கள் பெண்ணென்று எண்ணி `அம்மா’ என விளிக்கிறேன். என் எண்ணம் தவறெனில் சொல்லுங்கள் – என்னைத் திருத்திக்கொள்வேன்.)
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
கல்யாணமான புதிதில் இ யில் இருந்தேன். அப்போது அது செல்லுபடி ஆயிற்று.
ஒரு பத்து வருஷம் கழித்து ஆவன்னா. இனா செல்லுபடி ஆகவில்லை.
பிள்ளைகள் வளர்ந்ததும் ஈயன்னாவுக்குத் தாவினேன். இயலாமை!
இப்போ அ தான். அ விலேயே ஸ்பெஷல் அ. உதவி கிதவி எல்லாம் கிடையாது.
ஹி..ஹி…. நாந்தாங்க எல்லாம்!
http://kgjawarlal.wordpress.com
அன்பருக்கு,
//இப்போ அ தான். அ விலேயே ஸ்பெஷல் அ. உதவி கிதவி எல்லாம் கிடையாது.
ஹி..ஹி…. நாந்தாங்க எல்லாம்!//
இதோ, மனிதருள் ஒரு மாமனிதர், ஆண்களுள் ஒரு மாணிக்கம்!
திருமதி ஜவகர் கொடுத்துவைத்தவர்!
வாழ்க!
the manna has already entered in your mind.
two to three articles appeared in your blog.on tamanna
that is tamanna
அன்பருக்கு,
//the manna has already entered in your mind. two to three articles appeared in your blog.on tamanna that is tamanna//
மேலே அன்பர் கோவி. கண்ணனுக்கு நான் எழுதிய மறுமொழியைப் பாருங்கள்; `ஒருவேளை ஏதேனும் `கோளாறு’ இருக்குமோ? `கோளாறு’ என்னிடம்தானோ? ஒன்றும் விளங்கவில்லை ஐயா!’ என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
நீங்கள் சொல்வதுதான் அந்தக் கோளாறாக இருக்குமோ?
Kolaaru neenga kolaru pathigam padiyungal
or nothing wrong in enjoying the beauty without corrupting the mind.
அன்பருக்கு,
//nothing wrong in enjoying the beauty without corrupting the mind.//
`சிந்தனையில் களங்கம் ஏற்படுமோ’ என்று அஞ்சும் நிலையில் நான் இல்லை ஐயா. உங்கள் விளக்கம் நன்று.
தமன்னா மாதிரி இருந்தா சமையலுக்கு உதவுவானேன்.. சமயலே நாம தான் செய்யனும். எதுக்கு வம்பு….ஹான்
அன்பருக்கு,
//தமன்னா மாதிரி இருந்தா சமையலுக்கு உதவுவானேன்.. சமயலே நாம தான் செய்யனும். எதுக்கு வம்பு//
தமன்னாவைப்போல் இருந்தால்…? சமையல் மட்டுந்தானா… இதர வீட்டு வேலைகளை எல்லாம் யார் செய்வது?