சகுனம் நல்லதென்று விடிய விடியத் திருடலாமா?
அவன் இளைஞன்; அகவை இருபத்திரண்டு ஆண்டு; நார்வே நாட்டினன்.
டென்மார்க்கில் இருந்து படகுப் பயணம்; நார்வேயில் கிறிஸ்டியன்சாண்ட் என்னும் துறைமுக நகரில் இறங்கினான்.
வழக்கமான சோதனைக்காக ஆயத்துறையினர் (சுங்கத்துறையினர்) அவனைத் தடுத்து நிறுத்தினர்; சோதித்தனர்.
அவன் கொண்டுவந்த பையில் ஒரு சிலந்தி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அது தராந்துலா (tarantula) என்னும் வகையைச் சேர்ந்த மிகுந்த நஞ்சுள்ள சிலந்தி.
சிலந்தியைக் கண்டதும் ஆயத்துறையினருக்கு அந்த இளைஞன்பால் ஐயம் தோன்றியது; அவனை முழுமையாகச் சோதிக்க முடிவு செய்தனர்.
மார்பைச் சுற்றிப் பதினான்கு காலுறைகளைப் பிணைத்திருந்தான். ஒவ்வொரு காலுறையினுள்ளும் ஒரு சிறிய மலைப்பாம்பு! மொத்தம் பதினான்கு மலைப்பாம்புகள்!
அதிர்ச்சி அடைந்த ஆயத்துறையினர் அவன் காற்சட்டையைக் களையப் பணித்தனர்.
இரு கால்களிலும் பத்துத் தகரச் சிமிழ்கள்; சிமிழ்களில் பத்துப் பல்லிகள் (albino leopard geckos).
`திறமை மிகுந்த’ அந்த இளைஞனை யாரும் பாராட்டவில்லை; கிறிஸ்டியன்சாண்ட் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
தண்டம் (அமெரிக்க வெள்ளி: $2,256; மலேசிய ரிங்கிட்: MR7,963) கட்ட ஒப்புக்கொண்டால் அவனை விடுவிப்பார்கள்.
`திறமை’க்குத் தண்டமா…?
- அ. நம்பி
திறமைதான், கடத்துவதில் திறமை.கொஞ்சவா முடியும்…
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//திறமைதான், கடத்துவதில் திறமை.கொஞ்சவா முடியும்…//
பெரிய அளவில் கடத்தல் செய்பவனுக்குக்`கடத்தல் மன்னன்‘ என்று விருது வழங்கிச் சிறப்பிக்கின்றனவே சில தமிழிதழ்கள்…?
Nallathor Varaivu aiyyaa.. Mikka Nandri
திறமையைவிட தைரியத்தை எண்ணினால் ஆச்சரியம்தான் :))
அன்பருக்கு,
//Nallathor Varaivu aiyyaa.. Mikka Nandri//
அந்த இளைஞன்தானே நம் `நன்றியறிதலுக்கு’ உரியவன்…?
அன்பருக்கு,
//திறமையைவிட தைரியத்தை எண்ணினால் ஆச்சரியம்தான் :))//
உண்மைதான் ஐயா; பணம் வருமென்றால் எதனையும் செய்வதற்கு மனிதனுக்குத் திறமையும் துணிவும் தடையின்றி வரும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஜப்பானியர்: உலகிலேயே நங்கள் தான் மிகவும் மரியாதையை உள்ளவர்கள். ஏன் என்றல் தலையை ஆட்டி ஆட்டி ஆய், ஆய் என்று பதில் சொல்லுவோம்.
தமிழர்: நாங்கள் அதைவிட இன்னும் மேல். திருடனைக்கூட நாங்கள் `திரு’ போட்டுத்தான் அழைப்போம்.
மறைந்த அண்ணன் ஆதி குமணன் சொல்லிய நகைச்சுவை இது .
இதைதான் அந்த தமிழ் இதழ்களும் செய்கின்றனவோ?
அன்பருக்கு,
//இதைதான் அந்த தமிழ் இதழ்களும் செய்கின்றனவோ?//
இருக்கலாம் ஐயா; நாளிழ்களில் அடிக்கடி `கடத்தல் மன்னர்கள்’ குறித்துச் செய்திகளைக் காண முடிகிறதே!