அடுத்து என்ன?
எல்லாம் முடிந்துவிட்டனவா?
ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
வினாக்கள் பல.
உள்ளத்தைச் சிதைக்கும் எல்லா வினாக்களுக்கும் காலம் விடை சொல்லும்.
- அ. நம்பி
மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக்கொண்டு, இனம்புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது!
"ஈழம் எங்கள் தாகம்’ என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய்நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதாண்டு காலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டு விட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன!
ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள்: ""அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன் பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!”
ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத் தாய் ஒருத்தி அந்த மண்ணின் விடுதலைக்காகச் சுமந்தாள்!
முழுதும் படிக்க – இங்கு:
`தேர்தல் முடிந்தபின்னர் ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கக்கூடும்’ என ஓர் எதிர்பார்ப்பு; ஒரு நம்பிக்கை.
மையிருளில் மெல்லிய ஓர் ஒளிக்கீற்று.
ஒளிக்கீற்று மறைந்துபோனது.
காரிருள் மட்டுமே நிலைத்திருக்கிறது.
- அ. நம்பி
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)

