வேலை. திரைப்படம்.
இவ்விரண்டனுள் நல்வாழ்வுக்கு எது முதன்மையானது?
`வேலையே முதன்மையானது’ என்பவர்கள் ஊசிப்போன தேங்காய்த் துவையல் போன்றவர்கள்; இந்தத் தேங்காய் மடையர்கள் என்றைக்கும் உருப்படவே மாட்டார்கள்.
`திரைப்படமே முதன்மையானது’ என்பவர்கள் அப்போது அரைத்த கறிவேப்பிலைத் துவையல் போன்றவர்கள்; இந்த அறிவுக்கொழுந்துகள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று என்றென்றும் வளமாக வாழ்வார்கள்.
வேலை என்ன வேலை? எதற்கு வேண்டும் இந்த வேலை?
வேலைக்குச் செல்ல வேண்டா ஐயா, வேலைக்குச் செல்ல வேண்டா!
விடுப்பு எடுத்துக்கொண்டு திரையரங்குக்குச் செல்லுங்கள்.
ஒரு கிழமையில் குறைந்தது இரண்டு நாள்களாவது விடுப்பு எடுத்துக்கொண்டு திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள்.
நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் தந்நலம் அறவே இன்றி அல்லும் பகலும் பாடுபடும் திரையுலகினரின் அரிய அறிவுரை கீழே:
இந்தப் பெருந்தகைகளின் ஆலோசனையின்படி நடந்து எல்லாரும் கெட்டுச் குட்டிச்சுவர் ஆக வாழ்வில் முன்னேற உள்ளார்ந்த வாழ்த்துகள்!
- அ. நம்பி